articles

மதுரை முக்கிய செய்திகள்

தேமுதிக இரங்கல் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டவர், தமிழ் மாநிலச் செயலாளராக பணியாற்றியுள் ளார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. என்.சங்கரய்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற வினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த், தேமுதிக, நிறுவனத் தலைவர் - பொதுச்செயலாளர்

கொள்கை பிறழாமல் வாழ்ந்த போராளி
ப.சிதம்பரம் இரங்கல்

“மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஏற்றுக் கொண்ட கட்சியின் கொள்கைகளிலிருந்து பிறழாமல் தம் வாழ்நாள் முழுதும் போராளியாக விளங்கிய திரு. சங்கரய்யா  அவர்களுக்கு என் அஞ்சலி. அவர் புகழ் வாழ்க!” என்று காங்கி ரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல லட்சம் தோழர்களுடன் என் வலக்கை முட்டியும் உயர்கிறது

“மூச்சுத் திணறலின் காரணமாக இன்று காலை நானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். தோழர் சங்கரய்யா அவர்களின் இறப்புச் செய்தியை தோழர் சகு தயக்கத்துடன் கூறினார். பல லட்சம் தோழர்களின் வலக்கை முட்டிகளுடன் என் முட்டியும் உயர்கிறது: “தோழர் என்.எஸ் அவர்களே, உங்களுக்கு என் செவ்வணக்கம்” என்று மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாபெரும் தோழர் மறைந்தார்
கமல்ஹாசன் இரங்கல்

“நூறாண்டு தாண்டிய தன்வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என். சங்கரய்யா நம்மை விட்டு நீங்கினார். 

சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான். 

பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.